‘நாயகி பேசும் வசனம் அனைவரையும் மிரட்டிவிட்டது!' – நடிகர் சித்தார்த்

‘நாயகி பேசும் வசனம் அனைவரையும் மிரட்டிவிட்டது!' – நடிகர் சித்தார்த்

‘உடலுறவு வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம், கல்யாணம் எல்லாம் வேண்டாம்’ என கதாநாயகி பேசும் வசனம் அனைவரையும் மிரட்டிப் போட்டுவிட்டதாக நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் நடித்துள்ள டக்கர் படம் ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட படத்தின் நாயகன் நடிகர் சித்தார்த் பேசியதாவது, “கோவிட் காலத்துக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். டக்கர் பட இயக்குநர் கார்த்திக் இந்தப் படத்திற்காக என்னை சந்தித்தபோது, சில விஷயங்கள் எனக்கு ஹைலைட்டாக தோன்றியது. எந்த இடத்திலும் நிற்காத ஸ்பீடான ஒரு படம் இது. டக்கர் என இந்தப் படத்தின் தலைப்பின் அர்த்தம் பார்டர் தாண்ட தாண்ட மாறிக் கொண்டே இருக்கும். வட இந்தியாவில் டக்கர் என்றால் போட்டி, சில ஊர்களில் ஸ்மார்ட்டாக இருப்பதாக சொல்வார்கள். அதேபோல் மோதல், சூப்பர் என பல அர்த்தம் உண்டு.

இந்தப் படத்தில் டக்கர் பயன்படுத்தியதன் காரணம், மோதல். ஒரு பொண்ணுக்கும் ஹீரோவுக்குமான க்ளாஷ்தான் அது. சமீபகாலத்தில், சினிமாவில் வந்த கதாநாயகிகள் கதாபாத்திர வடிவமைப்பில் இது வித்தியாசமாக எனக்குப் பட்டது. குஷி போல காதலர்களுக்குள் வரும் பிரச்சினையா என்று கேட்டால் இல்லை. பணக்காரன் ஆக வேண்டும். ஆனால், அது முடியவில்லை எனும்போது இளைஞர்களுக்கு வரும் கோவம்தான் கதாநாயகனுக்கும். ’உங்களை இதுவரை சாஃப்ட்டாகதான் பார்த்திருப்பார்கள். இதில் முரடனாகப் பார்த்தால் வித்தியாசமாக இருக்கும்’ என இயக்குநர் சொன்னார். அவர் கொடுத்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தை எடுத்தோம். ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறேன் என என்னை நானே பாராட்டும் அளவுக்கு நன்றாக செய்திருக்கிறேன். இந்தப் படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் படம்தான். ஜூன் 9 அன்று இந்தப் படம் ஹிட் என்று சொல்லும் அளவுக்கு இதன் மீது நம்பிக்கை உள்ளது. எந்த அளவுக்கு நம்பிக்கை என்றால், கார்த்தியுடன் அடுத்தடுத்து படங்கள் நடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். தமிழ் சினிமாவில் அவர் முக்கியமான கமர்ஷியல் இயக்குநராக இருப்பார்.

நடிகர் யோகிபாபு, கதாநாயகி திவய்ன்ஷா, சீனியர் ஹீரோ அபிமன்யு, முனீஷ்காந்த், விக்னேஷ்காந்த என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ‘உடலுறவு வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம், கல்யாணம் எல்லாம்

வேண்டாம்’ என கதாநாயகி டிரைய்லரில் பேசும் வசனம் அனைவரையும் மிரட்டி போட்டுவிட்டது. யூடியூப் கமெண்டிலேயே இதுதொடர்பாக நிறைய விவாதங்கள். இந்த கதாநாயகி கதாநாயகனை சந்திக்கும்போது என்ன நடந்தது என்பதும் டக்கர் -ரில் இருக்கும். தொழில்நுட்பக் குழுவினர் சிறப்பான வேலையைக் கொடுத்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னாவுக்கு இந்தப் படம் மியூசிக்கலாக முக்கியமானதாக இருக்கும். ஆகஸ்ட் மாதம் வந்தால் ‘பாய்ஸ்’ படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிறது. இந்த 20 வருடத்தில் நிறைய நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். அடுத்த இரண்டு வருடங்களில் நல்ல படங்களில் கமிட் ஆகியுள்ளேன். உங்கள் அனைவரது ஆதரவுடனும் டக்கர் நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com