நடிகரும் இயக்குநருமான பாண்டியராஜனை வைத்து இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் ஒரு படத்தை இயக்க முடிவெடுத்ததும் அதற்கு ஒரு பெயரையும் அவர் தயாராக வைத்திருந்ததும் இப்போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து இன்று வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு:
” ஞானபீட விருதினைவாழ்த்த வந்திருந்தார்நடிகர் பாண்டியராஜன்
அவர்நடிப்பும் துடிப்பும்பிடிக்கும் எனக்கு
ஒரு தேநீர் அருந்தும் நேரம்உரையாடலுக்கு ஒதுக்கினோம்
இதுவரைஅவருக்குச் சொல்லாதஒரு கதை சொன்னேன்
"ஆண்பாவம் வெளிவந்துஉங்கள் புகழ்பரவத்தொடங்கியிருந்த நேரம்
பாலசந்தருக்குப் பாட்டெழுதக் கவிதாலயா சென்றிருந்தேன்
‘உங்களுக்குப் பாண்டியராஜனைத்தெரியுமா’ என்றார் பாலசந்தர்
‘தெரியும்; நல்ல பையன்’ என்றேன்
‘அவருக்குஒரு கதை வைத்திருக்கிறேன்;அவர்தான் பொருத்தமானவர்;அழைத்துவர முடியுமா’ என்றார்
‘உறுதியாக’ என்றேன்
அதன்பிறகு என்ன காரணமோஅது நின்றுபோனது" என்று சொல்லிமுடித்தேன்
"படமே எடுக்கவேணாம் கவிஞரேபாலசந்தர் என்னைநெனச்சதே போதும்"என்றவர் கண்களில்நீர்க்குடம் நிறைந்தது
அந்தக் கதைக்குஅவர்வைத்த தலைப்பைமட்டும்என்னால் மறக்கமுடியவில்லைபாண்டியராஜன்!
கூடாரமடித்து நெஞ்சில் குடியிருக்கிறது
’அவனுக்காக மழை பெய்கிறது’. “