நளபாகம் : கோழி வறுவல் – வேங்கட மூர்த்தி
தேவையானவை
1. கோழிக்கறி - 500கி
2. வெங்காயம் - 1 (பெரியது)
3. தக்காளி - 1
4. எண்ணெய் - 2 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள் - லி தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
7. கடுகு - 1 தேக்கரண்டி
8. கறிவேப்பிலை - 1 கொத்து
9. இஞ்சி - 15கி
10. பூண்டு - 15கி
11. சோம்பு - 1லீ தேக்கரண்டி
12. வரமிளகாய் - 8
13. கொத்தமல்லி - 3 தேக்கரண்டி
14. சீரகம் - லீ தேக்கரண்டி
15. மிளகு தூள் - 1 தேக்கரண்டி
16. இலவங்கப்பட்டை - 1
17. கிராம்பு - 2
18. ஏலக்காய் - 6 - 7
19. தேங்காய் துருவல் - 1 கப்
செய்முறை :
ஒரே அளவில் கோழிக்கறியை வெட்டி அதனுடன் 2 தேக்கரண்டி உப்பையும், 1 தேக்கரண்டி மஞ்சள் தூளையும் சேர்த்து ஐந்து நிமிடம் ஒதுக்கி வைக்கவும். வெங்காயத்தை பெரிய அளவில் வெட்டிக்கொள்ளவும். இஞ்சி, பூண்டு மற்றும் தக்காளியை தனித்தனியாக அரைத்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடேற்றி அதில் இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி, பூண்டு, மற்றும் தக்காளியை போட்டு வதங்கியவுடன் தேங்காய் துருவலை போட்டு நன்கு வதக்கவும். பின்பு தனியாக எண்ணெய் சூடேற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, சோம்பு , வரமிளகாய் , கொத்தமல்லி, பூண்டு, சீரகம் , மிளகு தூள், இஞ்சி கலவையை சேர்த்து மிதமான சூட்டில் வேகவைக்கவும். பின்பு தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பை சேர்த்து கோழிக்கறியை வேகவைக்கவும். நன்கு கோழிக்கறி வெந்தவுடன் எலுமிச்சை சாதம், தோசை அல்லது சப்பாத்திக்கு பரிமாறவும்.
பிப்ரவரி, 2016.