கவிஞனின் புன்னகை

கவிஞனின் புன்னகை
Published on

இருக்கிறார்கள் இன்றும்

அவன்தான்

தன்னை கசக்கி எறியப்போகிறான் என்பதை உணராமல்

வரவேற்கும்

பூக்களின்

வாரிசுகள் - எனச் சொல்லும் தச்சன் நாகராஜன் கவிதைகள் இயற்கையின் மீதும் வாழ்க்கையின் மீதும் பரிவு கொண்டவையாக இருக்கின்றன.

யார் யாராலோ பிழியப்படுவதாக இருக்கிறது/ இந்த வாழ்க்கை/ குருதி சொட்டச் சொட்ட என்கிறபோது கவிஞர் புன்னகைக்கிறார். நாம் திகைத்துப் போகிறோம்.

நெடி, தச்சன் இரா.நாகராஜன், வெளியீடு: முரண்களரி, பேச:9092545686. விலை: ரூ.80

பூமியே போதும்

கவிஞர் கோ.வசந்தகுமாரனின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் இந்த தொகுப்பு மணிமணியான வரிகளால் ஆகியிருக்கிறது.

வானம்

வசப்படவேண்டாம்

பூமியே

எனக்குப் போதும்.

------------

வரிசையில் நின்று

தரிசனம் தந்தேன்

கடவுளுக்கு.

இப்படி மாற்றுகோண அழகியலில் உருவான கவிதைகளைக் கொண்ட  தொகுப்பு இது.

பியானோ மீது கல்லெறிந்தாலும் இசை பிறக்கும், கோ.வசந்தகுமாரன், வெளியீடு: தமிழ் அலை, பேச: 7708597419,

விலை: ரூ.150

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com