ஆதித்யா எல்-1 எடுத்து அனுப்பிய செல்ஃபி
ஆதித்யா எல்-1 எடுத்து அனுப்பிய செல்ஃபி

பூமி மற்றும் நிலவு; செல்ஃபி எடுத்து அனுப்பிய ஆதித்யா எல்-1

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், பூமி மற்றும் நிலவு இருக்கும் புகைப்படத்தை அனுப்பியுள்ளது. இதனை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம், பி.எஸ்.எல்.வி. -சி57 ராக்கெட் வாயிலாக கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

மொத்தம், 125 நாட்கள் பயணம் செய்து, பூமியில் இருந்து, 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் என்ற பகுதியில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது.

இதன் சுற்று வட்டப் பாதை 2 முறை அதிகரிக்கப்பட்டு, அடுத்த சுற்றுக்கு செப்டம்பர் 10ஆம் தேதி உயர்த்தப்பட இருக்கிறது. தற்போது பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் ஆதித்யா எல்-1, பூமி மற்றும் நிலவுடன் செல்ஃபி எடுத்து அனுப்பிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 4ஆம் தேதி இப்படம் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com