05-12-2025 காலை தலைப்புச்செய்திகள்

Published on

1. நேற்றிரவு புதுதில்லிக்கு வந்த ரசிய அதிபர் புதினை விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்ற பிரதமர் மோடி. இரவு விருந்தும் அளித்தார். 

2. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சந்திக்கும் மரபை பா.ஜ.க. நிறுத்திவிட்டது- இராகுல் குற்றச்சாட்டு

3. திருப்பரங்குன்ற விவகாரம்- உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாட்டு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

4. இரண்டாவது நாளாக திருப்பரங்குன்றத்தில் திரண்ட பா.ஜ.க., இந்துத்துவ அமைப்பினர்- தீபம் ஏற்ற போலீஸ் தடை; மீறியதால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது.

5. நயினார் நாகேந்திரன் முதலிய பா.ஜ.க.வினர் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்; தேவையில்லாமல் அரசு பதற்றத்தை உருவாக்குவதாகவும் கருத்து. 

6. ஜெயலலிதா ஆட்சியில் 2014ஆம் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்ட தீர்ப்பையே தி.மு.க. அரசும் பின்பற்றுகிறது- அமைச்சர் இரகுபதி விளக்கம்

7. பா.ம.க. விவகாரம்- இராமதாஸ் தரப்பு உரிமையியல் நீதிமன்றத்தை அணுக தேர்தல் ஆணையம் ஆணை

8. அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு- தமிழகப் பயணம் குறித்து ஆலோசனை எனத் தகவல்

9. 77 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு- தமிழக அதிர்ச்சி

10. அடுத்த ஆண்டு அரசுப் பணியாளர் தேர்வுகள் ஆறு மட்டும் போதுமா?- அன்புமணி கேள்வி 

logo
Andhimazhai
www.andhimazhai.com