செய்திகள்
இராமேசுவரம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த பத்து மீனவர்களை இலங்கைக் கடற்படை இன்று கைதுசெய்தது.
வட இலங்கை, மன்னார் தெற்கு கடற்பரப்பில் இவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக இலங்கைப் படையினர் தெரிவித்துள்ளனர்.
அங்குள்ள தாழ்வுபாடு கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்ட தமிழக மீனவர்கள், விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
பின்னர், மன்னார் மாவட்ட கடல் தொழில், நீரியல் வளங்கள் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களும் விசாரணை நடத்தியபின்னர், மன்னார் நீதித்துறை நடுவர் மன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
பத்து பேரையும் வரும் 17ஆம் தேதிவரை தடுப்புக் காவலில் வைக்கும்படி சார்பு நடுவர் உத்தரவிட்டார்.