+2 தேர்வு - கடந்த ஆண்டைவிட 0.47% கூடுதல் தேர்ச்சி!

தேர்வு எழுதும் மாணவர்கள்
தேர்வு எழுதும் மாணவர்கள்கோப்பகப் படம்
Published on

தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறையில் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

இந்த ஆண்டில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை- 7 இலட்சத்து 92 ஆயிரத்து 494 பேர்.

தேர்ச்சி பெற்றவர்கள்- 7, 53, 142 பேர். 

கடந்த ஆண்டில் மொத்தத் தேர்ச்சி- 94.56 சதவீதம் என்கிற நிலையில், அதைவிட 0.47 சதவீதம் அளவுக்கு இந்த ஆண்டு மாணவர்கள் கூடுதலாகத் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

மாணவிகள் 3.54% கூடுதல் தேர்ச்சி 

இந்த ஆண்டில் தேர்வு எழுதிய மொத்த பெண் மாணவர்கள்- 4,19,316 பேர்.

இவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள்- 4,05,472 பேர். 

தேர்ச்சி வீதம்- 96.07%

தேர்வு எழுதிய ஆண் மாணவர்கள்- 3,73,178 பேர்

தேர்ச்சி பெற்றவர்கள்- 3,47,670 பேர்

தேர்ச்சி வீதம்- 93.16%

ஆண் மாணவர்களைவிட பெண் மாணவர்கள் இந்த ஆண்டில் 3.54 சதவீதம் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com