ஆம்னி பஸ்கள் விதிமீறலை கண்காணிக்க 30 குழுக்கள்!

சென்னை கோயம்பேடு தனியார் பேருந்து நிலையம்
சென்னை கோயம்பேடு தனியார் பேருந்து நிலையம்
Published on

'பொங்கல் விடுமுறையை ஒட்டி, அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க 30 சிறப்பு குழுக்களை போக்குவரத்து ஆணையரகம் அமைக்க உள்ளது.

இதுகுறித்து, தமிழக போக்குவரத்து துறை ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:

தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், ஆம்னி பஸ்கள் அதிகரித்து இயக்கப்படும். பொங்கல் பண்டிகை நெருங்க உள்ளதால், ஆம்னி பஸ்கள் இயக்கம் அதிகமாக இருக்கும். எனவே, ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

வரி நிலுவை, அதிக சுமை, பர்மிட் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்களும் காணப்படும்.

இதுகுறித்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க, தமிழகம் முழுதும், 30க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் இருப்பர். அடுத்த வாரம் முதல் இந்த சிறப்பு குழுக்கள் செயல்படும்.

இக்குழுவினர், நெடுஞ்சாலை மற்றும் முக்கிய பஸ் நிலையங்களில் திடீர் சோதனை நடத்துவர். ஆம்னி பஸ்களில் விதிமீறல்கள் இருந்தால், அபராதம் விதிப்பது, 'பர்மிட் சஸ்பெண்ட்' போன்ற நடவடிக்கைகளை எடுப்பர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com