8ஆம் தேதி - சென்னையில் ரேசன் அட்டை குறைகேட்பு முகாம்!

ration shop
ரேசன் கடை
Published on

பொது விநியோகத் திட்டம் தொடர்பான மக்கள் குறைகேட்பு முகாம் இந்த மாதம் சென்னையில் வரும் 8ஆம் தேதி நடைபெறுகிறது. 

சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் - நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 08.03.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.

அத்துடன், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உணவுபொருள் வழங்கல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com