தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு!

தேமுதிக தலைமை அலுவலகம்
தேமுதிக தலைமை அலுவலகம்
Published on

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தலைமையில் வருகிற (07.02.2025) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெறவுள்ளது.

வருகிற 12ஆம் தேதி 25-வது ஆண்டு கொடி நாள் விழாவை முன்னிட்டு முக்கிய ஆலோசனை மற்றும் கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளது. எனவே அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com