தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைப்பெற்று வருகிறது.
இதில் 137 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 1,500க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக தடபுலான விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்று வரும், இந்த கூட்டத்தில், 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அவை என்னென்ன பார்க்கலாம்.
* இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்
* மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்.
* பரந்தூரில் புதிய விமானம் நிலையம் அமைக்கக் கூடாது.
* இருமொழிக்கொள்கையில் உறுதி
* நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை
* மாநில அரசுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
* பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க , சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை.
* அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்.
* சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்காரணமான கையாலாகாத தி.மு.க அரசுக்குக் கண்டனம்
* டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணி நடத்தப்பட வேண்டும்.
* சமூக நீதியை நிலைநிறுத்த சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும்.
* இலங்கைத் தமிழர் பிரச்னைக்குப் பொது வாக்கெடுப்பே ஒரே தீர்வு
* பன்னாட்டு அரங்கிற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டுக.
* கொள்கைத் தலைவர்களின் வழியில் பயணிப்போம்
* தலைவருக்கே முழு அதிகாரம்
* கழகப் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்:
* கழகத்திற்காக அயராது பாடுபட்டு மறைந்த கழகச் செயல்வீரர்களுக்கு இரங்கல்: