தொடர்ந்து ஏறுமுகத்திலிருந்து வந்த தங்கம் விலை, இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. கடந்த மாதம் 25ஆம் தேதி வரை விலை குறைந்து கொண்டே வந்த நிலையில், 26ஆம் தேதியில் இருந்து கிடுகிடுவென விலை உயரத் தொடங்கியது. நேற்று சவரனுக்கு அதிரடியாக ரூ.400 அதிகரித்து புதிய உச்சம் தொட்டது. நேற்று ஒரு சவரன் ரூ.68,480-க்கும், ஒரு கிராம் ரூ.50 அதிகரித்து ரூ.8,560-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி,சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200 விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ரூ.160 குறைந்து ரூ.8,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல, வெள்ளியின் விலையும் சரிவை சந்தித்துள்ளது. இன்று ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.108-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 08 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.