இமாச்சல பிரதேச சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா
இமாச்சல பிரதேச சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி - காங்கிரஸ் முறியடிப்பு!

கட்சி மாறி வாக்களித்த 6 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை காட்சி தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்துள்ளார் இமாச்சல பிரதேச சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா.

மொத்தம் 68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு 40 எம்.எல்.ஏ.களும், பா.ஜ.க.வுக்கு 25 எம்.எல்.ஏ.களும் உள்ளனர். 3 பேர் சுயேச்சை எம்.எல்.ஏ.கள்.

நேற்று முன்தினம் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்ததால் சுயேச்சை ஆதரவுடன் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். இதையடுத்து, அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், இமாச்சல சட்டப் பேரவையில் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லை. எனவே, சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி எதிர்கட்சித் தலைவரும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.கள் நேற்று காலை ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லாவைச் சந்தித்து வலியுறுத்தினர்.

தொடர்ந்து, இமாச்சல முதல்வர் சுக்விந்தர் ராஜிநாமா செய்யப் போவதாக தகவல் வெளியான நிலையில், அது தவறான செய்தி என அவர் மறுப்பு தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் அரசு இமாச்சலில் ஐந்து ஆண்டு ஆட்சியை முழுவதுமாக நிறைவு செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இத்தகைய பரபரப்புகளுக்கு மத்தியில், மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு காங்கிரஸைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.கள் கட்சி மாறி வாக்களித்த குற்றத்துக்காக தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நேர்ந்தால், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளவே காங்கிரஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com