பெங்களூரில் போக்குவரத்து சேவைகள் நிறுத்தம்.
பெங்களூரில் போக்குவரத்து சேவைகள் நிறுத்தம்.

பெங்களூர் பந்த்: போக்குவரத்து சேவை நிறுத்தத்தால் அவதிப்படும் மக்கள்!

தமிழகத்திற்குக் காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால், தமிழக அரசு பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவைத் தொடர்ந்து கடந்த 19ஆம் தேதி முதல் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதைக் கண்டித்து பெங்களூரில் இன்று முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பெங்களூரு செல்லும் அரசு பேருந்துகள் ஓசூரில் நேற்றிரவு நிறுத்தப்பட்டது. இதனால், பேருந்துகளில் பயணித்த மக்கள் அத்திப்பள்ளி எல்லையைக் கடந்து சென்று அம்மாநில பேருந்துகளில் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது.

அதேபோல், தமிழ்நாட்டிலிருந்து செல்லும் லாரிகள் கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு நோக்கி கர்நாடகா வழியாக வட மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com