பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
243 தொகுதிகளை கொண்ட பீகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி (மெகா கூட்டணி) என இரண்டு பிரதான கூட்டணி கட்சிகளும், பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சியும் களத்தில் உள்ளன.
மும்முனை போட்டி வரும் நிலையில், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் கடும் இழுபறி நீடித்து வந்தது. தொகுதி பங்கீட்டில் முழுமையான உடன்பாடு ஏற்படாததால், இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்தன.
இந்த நிலையில், இன்று பாட்னாவில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இந்தியா கூட்டணி கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை முதலமைச்சர் வேட்பாளராக விஐபி கட்சியின் முகேஷ் சஹானி அறிவிக்கப்பட்டுள்ளார்.