கோப்புப் படம்
கோப்புப் படம்

புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் முறை! – சி.பி.எஸ்.இ திட்டம்

தேர்வு அறையில் பாடப் பத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறையை நடைமுறைப்படுத்த மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய அரசு, தேர்வு சீர்திருத்தம் குறித்து ஆராய, கான்பூர் ஐ.ஐ.டி பேராசிரியர் பிரேம்குமார் கல்ரா தலைமையிலான வல்லுநர் குழுவை அமைத்தது. அந்த குழு தேர்வு சீர்திருத்த வரைவு அறிக்கையை அப்போது வெளியிட்டது. அதில், கணினி முறையில் தேர்வு, உயர் சிந்தனை ஆய்வு திறன் தேர்வு, சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதுவது உள்ளிட்ட 12 பரிந்துரைகளை பரிந்துரைத்தது.

அக்குழுவின் பரிந்துரைகளின்படி, சி.பி.எஸ்.இ பல்வேறு அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த ஆண்டு வெளியிட்ட புதிய தேசிய பாடத்திட்டத்தில் உள்ள பரிந்துரைகளின்படி 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறையை பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்வை, 9 மற்றும் 10ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கணிதம், அறிவியல் உள்ளிட்ட சில பாடங்களை சோதனை முறையில் புத்தகங்களை பார்த்து தேர்வெழுத சி.பி.எஸ்.இ ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com