ஆம் ஆத்மி அமைச்சர் அதிசி
ஆம் ஆத்மி அமைச்சர் அதிசி

ஆம் ஆத்மி அமைச்சர் அதிசிக்கு 8ஆம் தேதிவரை தேர்தல் ஆணையம் கெடு!

பா.ஜ.க.வில் சேருமாறு மிரட்டப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் அதிசி கூறியது தொடர்பாக தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது. 

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் தில்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைதானதை அடுத்து, அந்த மாநில அமைச்சர் அதிசி கடந்த 2ஆம்தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, தனக்கு வேண்டப்பட்டவர்கள் மூலம் பா.ஜ.க.வில் சேர்ந்துவிடுமாறும் அப்படி சேர்ந்துவிட்டால் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படாது என்றும் இல்லாவிட்டால் அமலாக்கத் துறையின் மூலம் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைத்துவிடுவார்கள் என்றும் பா.ஜ.க. தரப்பில் மிரட்டினார்கள் என அதிசி குற்றம்சாட்டினார். 

இதற்கு பா.ஜ.க. தரப்பில் கிழக்கு தில்லி எம்.பி. மனோஜ் திவாரி எதிர்ப்பு தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தில் முறையிடப் போவதாகவும் கூறினார். 

இந்நிலையில் இன்று அதிசிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய அறிவிக்கையில், பா.ஜ.க. தொடர்பான பேச்சுக்காக பதில் அளிக்குமாறும் பிரச்சாரத்தின்போது எதிர்க்கட்சியினரைப் பற்றிஆதாரம் இல்லாத அவதூறைக் கூறக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com