நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி, அம்பேத்கர் சிலை
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி, அம்பேத்கர் சிலை

எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முடக்கவே தலைவர்கள் சிலை இடமாற்றம் - காங்கிரஸ்

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தக்கூடாது என்பதற்காகவே காந்தி, அம்பேத்கர், சிவாஜி சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது.

மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளால் எல்லாம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலா நிரந்தரமற்ற அரசு வீழ்ச்சியடைவதை நிறுத்திவிட முடியாது என்றும் காங்கிரஸ் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இது குறித்து கூறுகையில், ”தலைவர்களின் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு மக்களவைச் செயலாளர் அளித்திருக்கும் விளக்கம் ஏற்றுக் கொள்ள முடியாதது. இது குறித்து ஆளும் கட்சி, எந்த அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை மேற்கொள்ளவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

மக்களவைச் செயலாளர் வெளியிட்ட விளக்கத்தில், ”நாடாளுமன்ற வளாகத்தில் தற்போதிருந்த சிலைகளின் அமைப்பினால், பார்வையாளர்கள் வசதியாக அவற்றை பார்வையிட இயலவில்லை. இந்த காரணத்தினால்தான், அனைத்து சிலைகளும் மிகவும் மரியாதைக்கு உரிய முறையில் பிரேர்னா ஸ்தல் என்ற இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய இடம் நாடாளுமன்றத்தைப் பார்வையிட வருவோர், சிலைகளைப் பார்க்க வசதியான முறையில் மாற்றியமைக்கப்படவிருக்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

logo
Andhimazhai
www.andhimazhai.com