நாடு முன்னேற பிரதமர் மோடி சொன்ன 7 வழிவகைகள்!

Independence day speech of PM Modi
பிரதமரின் சுதந்திர தின உரை
Published on

தில்லியில் இன்றைய சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, வரும் 2047ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு வளர்ச்சியடைந்த தேசமாக மாற்ற ஏழு வழிகளில் முன்னேற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அவர் பேசியதாவது:

"பலவீனமான நாடுகள் பட்டியலில் இருந்த இந்தியா, கடந்த 12 ஆண்டுகளில், பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் நாடாக முன்னேறியுள்ளது.

தன்னிறைவு அடைந்த ஒரு நாடாக நாம் முன்னேற வேண்டும். இதற்கு, ஏழு வழிகளில் வலிமையடைய வேண்டும்.

1) உற்பத்தி ஆற்றல்: இந்தியாவை ஒரு நம்பகமான உலகளாவிய விநியோகச் சங்கிலியாக மாற்ற வேண்டும்.

2) வேளாண்மை – உணவு பொருட்கள்: இந்திய உணவுப் பொருட்களின் செய்முறைகளில் முன்னேற்றங்களைப் புகுத்தி உலகளாவிய நுகர்வோருக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

3) தொழில்நுட்பம்- புதுமை: செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், விண்வெளி, ரோபோட்டிக்ஸ், தரவு மையங்கள், அடுத்த தலைமுறைக்கான தகவல்தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும்.

4) விரைவு ஆற்றல்: அதிவிரைவு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், விமானநிலையங்கள், துறைமுகங்கள், பல்முனை சரக்கு போக்குவரத்து ஆகியவற்றை விரிவுபடுத்த வேண்டும்.

5) பாதுகாப்பு சக்தி: தற்சார்புடைய பாதுகாப்பு அம்சங்களை முன்னேற்றி இந்தியாவை சிறந்த ஏற்றுமதியாளராக முன்னேற்ற வேண்டும்.

6) பசுமை – நீலப் பொருளாதார வளர்ச்சி: புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பசுமை ஹைட்ரஜன், சேமிப்பு, பசுமைப் போக்குவரத்து, மீன்வளம், கடல்சார் தொழில்நுட்பம் ஆகியவற்றை விரிவுபடுத்துதல்.

7) இந்தியாவின் மென்சக்தி : யோகா, ஆயுர்வேதம், சுகாதாரம், கலாச்சாரம், இந்தியாவின் பாரம்பரிம் ஆகியவற்றைக் கொண்டு நம் நாட்டின் செல்வாக்கை உலக அளவில் கொண்டுசெல்ல வேண்டும்.

அடுத்த ஓராண்டில் 1 கோடி இளைஞர்களுக்கு ஏ.ஐ. துறையில் பயிற்சி வழங்கப்படும்.

வரும் 2047ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி உற்பத்தியை எட்ட வேண்டும். அடுத்த 6 அல்லது 7 ஆண்டுகளில் 5 புதிய அணு உலைகள் பயன்பாட்டிற்கு வரும்." என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com