இரயில் முன்பதிவு இரத்து- புதிய விதிமுறை வருகிறது

இரயில்
இரயில்
Published on

இரயில் பயணச்சீட்டுகளை இரத்து செய்வதில் தற்போதைய நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வரும் ஏப்ரல் முதல் தேதி முதல் இவை நடைமுறைக்கு வருகின்றன.

அதன்படி, இரயில் சீட்டுகளை, வண்டி புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் இரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது.

எட்டு மணி நேரத்துக்கு முன்பிருந்து 24 மணி நேரத்துக்குள் இரத்து செய்தால் 50% தொகை மட்டுமே திருப்பித் தரப்படும்.

வண்டி புறப்படுவதற்கு முன்னர் 72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் சீட்டை இரத்து செய்தால் இரத்து கட்டணம் தவிர, பயணக் கட்டணத்திலும் 25% பிடித்தம் செய்து தரப்படும்.

வண்டி புறப்படுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்னர் இரத்து செய்தால் மட்டுமே முழு கட்டணம் திருப்பித் தரப்படும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com