சட்டப்பேரவைத் தேர்தல்
சட்டப்பேரவைத் தேர்தல்வடிவமைப்பு - எஸ்.கார்த்தி

நாளை முதல்கட்டத் தேர்தல்- தமிழகம் உட்பட 21 மாநிலங்களில்!

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள், ஒன்றிய ஆட்சிப் பகுதிகளில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

இதில், 10 மாநிலங்கள், ஒன்றியப் பகுதிகளில் முழுமையாக ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படுகிறது.  மீதமுள்ள 11 மாநிலங்கள், ஒன்றியப் பகுதிகளில் பகுதியளவுக்கு வாக்குப்பதிவு இடம்பெறுகிறது. 

முதல் கட்டத்தில், மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடத்தப்படுகிறது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்காளர்கள் தங்கள் வாக்கைச் செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com