வேட்புமனு தாக்கல் செய்யும் பிரதமர் மோடி
வேட்புமனு தாக்கல் செய்யும் பிரதமர் மோடி

வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

மக்களவைத் தேர்தலில் 4 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்னும் 3 கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் தீவிரமாக நடந்துவருகிறது.

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார்.

வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் இன்று காலையில் வேட்புமனுவைத் தாக்கல்செய்தார்.

பிரதமரின் வேட்புமனுத் தாக்கலின்போது மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, இராஜ்நாத் சிங், பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா உட்பட்டோர் உடனிருந்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com