பெற்றோரை புறக்கணித்தால் சம்பளம் கட்... விரைவில் வருகிறது புதிய சட்டம்!

வயதான தம்பதிகள்
வயதான தம்பதிகள்
Published on

பெற்றோரை புறக்கணிக்கும் அரசு ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்தில் ஒரு பகுதியை குறைக்க தெலுங்கானா அரசு சட்டம் கொண்டு வர உள்ளது.

தெலுங்கானாவில், குருப் - 2 மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன கடிதம் வழங்கும் நிகழ்ச்சி ஹைதராபாதில் நேற்று நடந்தது. இதில், அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பங்கேற்று பணி நியமன ஆணையை வழங்கினார். இதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: “பிரச்னைகளுடன் வரும் பொதுமக்களிடம் அரசு ஊழியர்களான நீங்கள் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரை அரசு ஊழியர்கள் புறக்கணித்தால், அவர்களது சம்பளத்தில், 10 முதல் 15 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட தொகையை, ஊழியர்களின் பெற்றோர் வங்கி கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீங்கள் சம்பளம் பெறுவது போல் உங்கள் பெற்றோரும் மாத சம்பளம் பெறுவது இதன் மூலம் உறுதி செய்யப்படும். இது தொடர்பாக புதிய சட்டத்தை கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான புதிய மசோதாவை உருவாக்குவதற்கான குழுவை அமைக்க, தலைமை செயலர் ராமகிருஷ்ண ராவை கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com