குழந்தைகளின் ஆபாசப் படம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேசின் தீர்ப்பு ரத்து!
குழந்தைகளின் ஆபாசப் படங்களை செல்போனில் பார்த்ததற்காக, சென்னை அம்பத்தூரில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இதற்காக அவர் மீது போக்சோ சட்டத்தின்படி வழக்கு பதியப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற விசாரணையில் தீர்ப்பளித்த ஆனந்த் வெங்கடேஷ், குழந்தைகள் ஆபாசப் படம் பார்ப்பது தவறு அல்ல; மற்றவர்களுக்கு அனுப்புவதுதான் குற்றம் என்று அவரை விடுவித்தார்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று அவ்வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி பர்திவாலா அமர்வு தீர்ப்பளித்தது.
நீதிபதி ஆனந்த் வெங்கடேசின் தீர்ப்பை ரத்துசெய்த உச்சநீதிமன்றம், குழந்தைகள் ஆபாசப் படத்தை செல்போனில் பார்ப்பது மட்டுமல்ல; அதை செல்போனில் வைத்திருந்தாலே குற்றம்தான்; குழந்தை ஆபாசப் படம் எனும் சொல்லை உயர்நீதிமன்றம் பயன்படுத்தக்கூடாது எனக் கூறியுள்ளது.
குழந்தைகள் மீதான பாலியல் குற்றம், சுரண்டல் எனும் அவசர சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளது.
