அமித்ஷா
அமித்ஷா

தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும்! - அமித்ஷா திட்டவட்டம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றப்பட்டது. எனினும், இந்தச் சட்டத்தை அமல்படுத்த கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, சட்டத்தை அமல்படுத்தும் முடிவு நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா கூறியதாவது:

"குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது நாட்டின் ஒரு சட்டம். மக்களவைத் தேர்தலுக்கு முன் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். இதில் எந்தக் குழப்பமும் இல்லை.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது புதிதாக குடியுரிமை வழங்குவதற்கான சட்டம்தானே தவிர, யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் அல்ல. ஆனால், நமது நாட்டில் உள்ள சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் தூண்டப்படுகிறார்கள். யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கான அம்சம் எதுவும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இல்லை. வங்கதேசத்திலும், பாகிஸ்தானிலும் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கான வழிவகைகள் மட்டுமே குடியுரிமை திருத்தச் சட்டத்தில் உள்ளன" என்று அமித்ஷா பேசினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com