“தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பு காலம் தொடக்கம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

“தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பு காலம் தொடங்கியதாக” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 'இரும்பின் தொன்மை' என்ற நூலை வெளியிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “முன் தோன்றிய மூத்த குடி என்று வெற்று பெருமை பேசுவதாக சிலர் விமர்சித்தனர். ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக சொல்லி இருந்தேன். பலரும் என்ன அறிவிப்பு என கேட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு வரும்வரை கேட்டுக் கொண்டே இருந்தார்கள். தமிழர்களுடைய தொன்மையை உலகத்திற்கு சொல்லும் வகையில் நான் இப்பொழுது அறிவிக்க போகிறேன். இங்கே கூடி இருப்பவர்களும், நேரலையில் இந்த இந்த விழாவை பார்த்துக் கொண்டிருப்பவர்களும் கவனமாக கேளுங்கள்.

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்புக்காலம் தொடங்கியது. 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு அறிமுகமாகி விட்டது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உலகத்தின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பூனே நகரில் உள்ள அகழ்வாய்வு நிறுவனம், அகமதாபாத்தில் உள்ள அகழ்வாராய்ச்சி நிறுவனம், அமெரிக்க நாட்டின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள பீட்டா ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டது. இப்படி பல ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்து ஒரே மாதிரியான முடிவுகள் கிடைக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட முடிவுகள் கூர்ந்து ஒப்பாய்வு செய்ததில் ஒரே மாதிரியான முடிவுகள் கிடைத்துள்ளது. இப்போது கிடைத்துள்ள கதிரியக்க கால கணக்கீடுகள் மூலம் தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமாகிவிட்டது என தெரிய வருகிறது.'' என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com