'கேரள கோமியம் சிறந்தது, தமிழக கோமியம் தீமையானதா?'

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி
Published on

“கேரள கோமியம் சிறந்தது, தமிழக கோமியம் தீமையானது என்கிறார்களோ கம்யூனிஸ்டுகள்?” என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோமியம்' குறித்து ஐ.ஐ.டி இயக்குனரின் கருத்துக்கு பொங்கு பொங்கு என்று பொங்கி கொண்டிருக்கிறார்கள் கம்யூனிஸ்டுகள். அய்யோ, அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை பரப்புகிறார் என்று விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து கொண்டிருக்கிறார்கள்.

கேரளாவில், அரசுக்கு சொந்தமான 'ஒளஷதி' என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம் மாட்டு சிறுநீர் மற்றும் சாணத்தில் தயாரிக்கப்பட்ட 'பஞ்சகவ்ய க்ரிதம்' என்ற மருந்தை தயாரிக்கிறது. இந்த மருந்தானது, மன நோய், மஞ்சள் காமாலை, காய்ச்சல், வலிப்பு நோய் உள்ளிட்டவைகளை குணமாக்குவதோடு, ஞாபக சக்தியை அதிகரிக்கும் அருமருந்து என்று கூறுகிறது.

மேலும் இதே கேரளா கம்யூனிஸ்ட் அரசு தான் இந்திய மருத்துவ ஆய்வு ஆணையத்திடம், கொரோனா சிகிச்சைக்கு மாட்டு சிறுநீரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

மாட்டு சிறுநீர் மற்றும் சாணத்தின் மூலம் தயாரிக்கும் மருந்துகளை விற்பதன் மூலம் கோடிக்கணக்கில் லாபமீட்டுகிறது கேரள கம்யூனிஸ்ட் அரசு என்ற நிலையில், ஐஐடி இயக்குனர் கூறியதை அரசியலாக்கிக் கொண்டிருப்பது அருவருக்கத்தக்கது.

ஒரு வேளை, கேரள கோமியம் சிறந்தது, தமிழக கோமியம் தீமையானது என்கிறார்களோ கம்யூனிஸ்டுகள்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com