‘சுட்டுக்கொல்ல வேண்டும்' - பாலியில் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் தாயார் கண்ணீர் பேட்டி!

‘சுட்டுக்கொல்ல வேண்டும்'  - பாலியில் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் தாயார் கண்ணீர் பேட்டி!
Published on

“எனது மகளை இந்த நிலைக்கு ஆளாக்கிய நபரை சுட்டுக்கொல்ல வேண்டும்.” என சிறுமியின் தாயார் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10 வயது சிறுமி ஒருவர் படித்து வருகிறார். இவரின் பாட்டி வீடு அந்தப்பகுதியில் உள்ளது.

கடந்த 12ஆம் தேதி பள்ளி முடிந்ததும் சிறுமி, தன்னுடைய பாட்டி வீட்டுக்கு தனியாக நடந்துச் சென்றார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், சிறுமியை வலுகட்டாயமாக தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மாந்தோப்புக்கு சென்றிருக்கிறார்.

ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என்பதால் வலுக்கட்டாயமாக சிறுமியை பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கியிருக்கிறார். இந்தச் சமயத்தில் அவ்வழியாக பைக்கில் ஒருவர் சென்றிருக்கிறார். பைக் சத்தம் கேட்ட இளைஞர், சிறுமியை மாந்தோப்பில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டிருக்கிறார். இளைஞரின் கொடூர செயலால் பாதிக்கப்பட்ட சிறுமி, அழுதப்படியே பாட்டியின் வீட்டுக்குச் சென்றுக்கு நடந்ததை கூறியிருக்கிறார்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர் ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்ற போலீஸார் விசாரணையை தொடங்கினர். பின்னர் அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமி நடந்துச் செல்லும் காட்சியும் அவரைப் பின்தொடர்ந்து செல்லும் இளைஞரின் உருவமும் அந்தப்பகுதியில் உள்ள ஒரு சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

அந்த சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியில் வராமல் தடுக்க அதற்கான முன்னேற்பாடுகளை ஆரம்பாக்கம் போலீஸார் செய்தனர். இருந்தபோதிலும் அந்த சிசிடிவி காட்சியை செல்போனில் பதிவு செய்த ஒருவர் அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது திருவள்ளூர் மாவட்ட போலீஸாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையடுத்து வீடியோ எப்படி வெளியானது என சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் ஆரம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை முடிந்து அவர் நலமாக உள்ளார். சிறுமிக்கு போலீஸார் கவுன்சலிங் அளித்திருக்கிறார்கள்.

சம்பவம் நடந்து சில தினங்களாகியும் இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட இளைஞர் யார் என்ற விவரம் திருவள்ளூர் மாவட்ட போலீஸாருக்கு தெரியவில்லை.

சம்பவம் நடந்து ஒருவாரம் ஆகியும் இன்னும் குற்றவாளி கைது செய்யப்படாதது குறித்து சிறுமியின் தயார் கண்ணீருடன் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில், “எனது மகளை அடித்து, துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். ப்ளீஸ் அங்கிள் என்னை விட்டுவிடுங்கள், என எனது மகள் அவனிடம் கெஞ்சியுள்ளாள்.

மிகவும் ஆபத்தான நிலையில் எனது மகள் சிகிச்சை பெற்று வருகிறார். எனது மகளை வன்கொடுமை செய்த அந்த நபர் யார் என்று காவல்துறை இன்னும் கண்டுபிடிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. உடடினயாக அந்த நபரை காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும். எனது மகளுக்கு ஏற்பட்டதுபோல வேறு யாருக்கும் நிகழக்கூடாது. எனது மகளை இந்த நிலைக்கு ஆளாக்கிய நபரை சுட்டுக்கொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com