‘முருகன் மாநாடு... திருமாவளவன் போன்றவர்களுக்கு பிடிக்கவில்லை...!’

எல்.முருகன்
எல்.முருகன்
Published on

“முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவன் போன்றவர்களுக்கு பிடிக்கவில்லை என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

“தமிழகத்தின் ஆன்மீக வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இன்று அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் முருக பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முருக பக்தர்கள் மாநாடு இன்று மாலை 3 மணிக்கு மதுரை கலைஞர் திடலில் நடைபெற உள்ளது. பல லட்சம் மக்கள் இன்று மாலை 6 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாட உள்ளனர். இந்த புனித தருணத்தில் தமிழக முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினும் வீட்டில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாட வேண்டுகிறேன். இது ஒரு கட்சி சார்ந்த மாநாடு அல்ல என்றும் அனைத்து தரப்பினரும் கட்சி பேதமின்றி பங்கேற்கும் ஆன்மீக மாநாடு.

இந்த மண் ஆன்மீக மண் என்பதை உலகுக்கு இது நன்றாக நிரூபிக்கிறது. அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது முருக பக்தர்களுக்கான மாநாடு.

முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவன் போன்றவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வேறு மதங்கள் இப்படி ஒன்று சேர்ந்தால் எதிர்ப்பு தெரிவிக்க துணிவார்களா? மதுரை முருகர் மாநாட்டிற்கு காவல் துறையின் ஒத்துழைப்பு இல்லை. சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com