வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம்! – அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு
Published on

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நாளை பரந்தூரில் விவசாயிகளை தவெக தலைவர் விஜய் சந்திக்க உள்ள நிலையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு புதிய விமான நிலையத்தின் தேவை குறித்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து விருதுநகரில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தின் நிதி நிலைமை கட்டுக்குள் உள்ளது. நிதி நிலைமையை கட்டுக்குள் வைக்க தேவையான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கிறோம். ஒவ்வொரு நிதியாண்டும் நிதிக்குழு நிர்ணயம் செய்த அளவைவிட குறைவாகவே கடன் பெற்றுள்ளோம்.

மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் கடன் சுமை அதிகரிக்கிறது. விமான நிலையத்தை எதிர்த்து போராடும் பரந்தூர் மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். மக்களின் குறைகளை விஜய் கேட்டு அரசிடம் கூறினால் அதனை சரிசெய்ய பரிசீலனை செய்வோம்.

விமான நிலையங்களை உருவாக்குவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானது. தற்போது உள்ள விமான நிலையம் மிகச் சிறிய ஏக்கர் பரப்பளவில் உள்ளது. தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியமாகிறது. தொழில், வர்த்தக கட்டமைப்பை உறுதிசெய்ய பரந்தூர் விமான நிலையம் உருவாக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com