ரஜினி – கமலுக்கு கேங்ஸ்டர் கதை… எப்போது நடக்கும்? - லோகேஷ் கனகராஜ் பதில்

ரஜினி – கமல்
ரஜினி – கமல்
Published on

ரஜினி – கமல் இணைந்து நடிப்பதற்கான முயற்சிகளை செய்ததாகவும் அத்திட்டம் கொரோனாவால் கைவிடப்பட்டதாகவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தகட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதைத் தொடர்ந்து, லோகேஷ் கைதி - 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சுதீர் சீனிவாசன் என்பவருக்கு நேர்காணல் கொடுத்த லோகேஷ் கனகராஜ் தனது திரைப்பட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், ரஜினி – கமல் இருவரும் சேர்ந்து நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடந்ததையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

“ரஜினி – கமல் இருவரும் இணைந்து நடிக்க வைக்க பல முயற்சிகளை எடுத்தேன். நான் கதை சொல்லி முடித்தபிறகு கமல்ஹாசனும் – ரஜினிகாந்தும் என் முன்பாகவே போனில் பேசிக் கொண்டார்கள். முக்கியமாக, நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினி நாயகனாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால், கொரோனாவால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இவர்கள் இருவரையும் வயதான கேங்ஸ்டர்களாகக் காட்டும் கதையையும் வைத்திருந்தேன்.

பின், வணிகம் மற்றும் பிற காரணங்களால் இப்போது அப்படத்தை எடுப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. விக்ரமும் ஜெயிலரும் எடுப்பதற்கு முன்னால் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. இப்போது அது நடந்தால் மிகப்பெரிய விஷயமாக இருக்கும்”என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com