காமன்வெல்த் போட்டியின் குத்துச்சண்டைப் பிரிவில், இறுதிப் போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த 10 வீரர்கள் முன்னேறி சாதனை படைத்துள்ளனர்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், இந்திய வீரர்கள் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற குத்துச்சண்டையின் அரையிறுதிப் போட்டியில் பங்கேற்ற 10 பேரும், இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர், வீராங்கனைகள்:
ஆண்கள் - 5 பேர்
1) ஜடுமணி சிங்
2) சச்சின் சிவாச்
3) அங்குஷ் பங்கால்
4) நரேந்தர் பெர்வால்
5) லக்ஷ்ய சாஹராவத்
பெண்கள் - 5 பேர்
1) ப்ரீத்தி பவார்
2) ஜெய்ஸ்மின் லம்போரியா
3) அருந்ததி சவுத்ரி
4) லவ்லினா போர்கோஹைன்
5) சனம் சச்சார்
இதில், ஜெய்ஸ்மின் லம்போரியா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.