குகேசுக்கு ரூ.5 கோடி பரிசு - தொலைபேசியில் முதல்வர் வாழ்த்து!

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற குகேஷ்
முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற குகேஷ்(கோப்புப் படம்)
Published on

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. குகேசுக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தற்போது சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் (FIDE World Championship 2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் நடப்பு சாம்பியனான சீனாவின் திரு. டிங் லிரெனை நேற்று வென்று சாதனை படைத்துள்ளார்.  

மிக இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று உலக செஸ் சாம்பியனாக வாகைசூடி சாதனை படைத்து, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த திரு. டி. குகேசை முன்னதாக தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் குகேஷ் பாராட்டியிருந்தார். கையோடு அவரைத் தொலைபேசி வாயிலாகவும் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.     

”தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள குகேசுக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கவேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கோரிக்கை விடுத்திருந்தார். அதனையேற்று, குகேசை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அவருக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.” என்றும் அரசுச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com