அமர் பிரசாத், கருக்கா வினோத்துக்கு போலீஸ் காவல்!

அமர் பிரசாத், கருக்கா வினோத்துக்கு போலீஸ் காவல்!

பா.ஜ.க. பிரமுகர் அமர் பிரசாத், ரவுடி கருக்கா வினோத் ஆகியோரை போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளது. 

மூன்று வழக்குகளில் அண்மையில் சிறையில் அடைக்கப்பட்ட பா.ஜ.க.வின் மாநில திறன் மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் அமர் பிரசாத்துக்கு ஒரு வழக்கில் பிணை வழங்கப்பட்டது. அதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த காவலில் எடுக்க அனுமதி தருமாறு சென்னை, ஆலந்தூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் முறையிடப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நடுவர் சந்திரபிரபா அமர் பிரசாத்தை 3 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார். 

இதனிடையே, ஆளுநர் மாளிகைக்கு முன்பாக பெட்ரோல் பாட்டில் குண்டை வீசிய ரவுடி கருக்கா வினோத்தை சைதாபேட்டை நீதிமன்றத்தில் இன்று காலையில் காவல்துறையினர் முன்னிலைப்படுத்தினர். அவரிடம் மேற்கொண்டு விசாரிக்க ஒரு நாள் போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com