ஆவின் விலைக்குதான் பால் கொள்முதல்செய்கிறோம்: அமுல் நிறுவனம் விளக்கம்

ஆவின் விலைக்குதான் பால் கொள்முதல்செய்கிறோம்: அமுல் நிறுவனம் விளக்கம்

குஜராத்தை சேர்ந்த அமுல் நிறுவனம், தமிழகத்தில் பால் கொள்முதலை செய்யவிருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதில் அமுல் நிறுவனம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது என்றும், அமுல் பால் கொள்முதல் செய்தால் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பால் மற்றும் பால் பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கி விடும் சூழல் ஏற்படும் என கவலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இவ்விவகாரத்திற்கு தமிழ்நாடு அமுல் பொறுப்பாளர் ஒருவர் விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ’தமிழகத்தில் ஆவினுக்கு எதிராக வியாபாரம் செய்ய மாட்டோம். ஆவினின் கொள்முதல் விலையை நாங்களும் நிர்ணயித்து கொள்முதல் செய்வோம்.

நாங்கள் நலிவடைந்த பால் விற்பனையாகாத கிராமங்களில் மட்டுமே கொள்முதல் செய்கிறோம். ஆவினின் கொள்முதல் விலையைவிட ஒரு பைசா ரூபாய் கூட அதிகரிக்க மாட்டோம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 15 சுய உதவிக்குழு மூலம் 5,000 லிட்டர் பால் கொள்முதல் பெற்று வருகிறோம். அந்த பால் கிருஷ்ணகிரியில் குளிரூட்டப்பட்ட ஆலை மூலம் பால் பதப்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com