சென்னை, சூளை கண்ணப்பர் திடலில் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை தந்த முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை, சூளை கண்ணப்பர் திடலில் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை தந்த முதலமைச்சர் ஸ்டாலின்

இன்னும் களப் பணிக்கு வாருங்கள்- மு.க.ஸ்டாலின் அழைப்பு!

சென்னைப் புயல் பாதிப்புகளில் உதவிசெய்ய இன்னும் களப்பணிக்கு வரவேண்டும் என முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள செய்தி:

” அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் நம்மைச் சூழ்ந்திருக்கும் மிக்ஜாங் புயல் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களையப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

களத்தில் இறங்கி உதவிகள் செய்துகொண்டிருக்கும் கழகத்தினருடன், இன்னும் பல தோழர்கள் உடனே தோள் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பாதிப்புகளில் இருந்து மீண்ட பகுதிகளைச் சேர்ந்த கழகத் தோழர்கள் விரைந்து வாருங்கள்!” என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com