சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

எடப்பாடியை ஆஜராகச் சொல்லுங்க- உயர் நீதிமன்றம்!

கொடநாடு வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புபடுத்தி டெல்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் வீடியோ வெளியிட்டார். இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் அதில் சில தகவல்களைக் கூறியிருந்தனர்.

அதை மறுத்ததுடன் மான இழப்பீடு கேட்டு 2019ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

அந்த வழக்கில் சாட்சியங்களைப் பதிவதற்காக மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட் டிருந்தது. ஆனால், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் வந்து சாட்சியம் அளிக்க இயலாது எனக் கூறி, தன் வீட்டில் சாட்சியத்தைப் பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க பழனிசாமி கேட்க, நீதிமன்றமும் அதற்கு விலக்கு அளித்தது.

இதற்காக, வழக்கறிஞர் ஆணையராக எஸ். கார்த்திகை பாலனையும் நீதிமன்றம் நியமித்தது. அதை எதிர்த்து சாமுவேல் மேத்யூ மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அமர்வு இதை விசாரித்தது.

விலக்களிக்க வேண்டும் என கூறக்கூடிய காரணங்கள் ஏற் றுக்கொள்ளும்படியாக இல்லை என்ற நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமி மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜ ராக அறிவுறுத்தல் வழங்க அவர் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர். 

அடுத்த விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com