கோவையிலும் கலைஞர் நூலகம்!

கலைஞர் நூலகக் கட்டடம், மதுரை
கலைஞர் நூலகக் கட்டடம், மதுரை
Published on

கொங்கு பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கையில் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கோவை நகரில் கலைஞர் நூலகம், பூஞ்சோலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

”கோவை வாழ் பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரின் அறிவுத் தாகத்தை மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம், முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் கோயம்புத்தூரில் அமைக்கப்படும்.

நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூரில், தகவல் தொழில்நுட்பம். வாழ்வியல் அறிவியல் விண்வெளி பொறியியல் துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற உயர்தொழில்நுட்ப அலுவலகங்களுக்கான தேவை அதிகரித்துக் வருகிறது. இதனைக் கருத்திற்கொண்டு, கொண்டே 20 இலட்சம் சதுரஅடியில் இரண்டு கட்டங்களாக 1100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் தகவல் தொழில்நுட்பப் பூங்கா கோவை விளாங்குறிச்சியில் அமைக்கப்படும்.”

logo
Andhimazhai
www.andhimazhai.com