தமிழ் நாடு
செந்தில் பாலாஜிக்கு ஜனவரி 4வரை சிறைக்காவல் நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிறைக்காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பதின்மூன்றாவது முறையாக இன்று நீட்டித்தது.
கடந்த ஜூன் 14ஆம்தேதியன்று அமலாக்கத் துறை சோதனைக்கு உட்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, அன்று இரவே கைதுசெய்யப்பட்டார். இதயப் பிரச்னை காரணமாக, தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.
பின்னர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே செந்தில் பாலாஜியின் சார்பில் பிணை மனு தாக்கல்செய்யப்பட்டதை, நீதிமன்றம் ஏற்கவில்லை.
உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் பாலாஜிக்கு பிணை கிடைக்கவில்லை.
இந்த நிலையில், இன்று அவருடைய சிறைக்காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 13ஆவது முறையாக நீட்டித்தது.