தமிழ் நாடு
சென்னை நூலக ஆணைக் குழுவின் தலைவராகப் பணியாற்றிய கயல் தினகரன் இன்று காலமானார்.
திமுக இலக்கிய அணியின் இணைச் செயலாளராக இருந்துவந்த இவர், தமிழ்நாடு அரசின் தமிழ்த் தென்றல் திரு வி.க. விருது பெற்றுள்ளார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், தி.மு.க.வின் இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை உட்பட பலர் தி.மு.க. நிர்வாகிகளும் தினகரனின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.