ஜன.14 முதல் தாம்பரம்- தூத்துக்குடி பொங்கல் சிறப்பு ரயில்!

ஜன.14 முதல் தாம்பரம்- தூத்துக்குடி பொங்கல் சிறப்பு ரயில்!

பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை தாம்பரத்திலிருந்து தூத்துக்குடிக்கு 14ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்வண்டி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது முழுவதுமாக முன்பதிவில்லா ரயில்வண்டியாக இயக்கப்படும்.

சென்னையிலிருந்து 14ஆம் தேதி ஞாயிறு காலையும், 16ஆம் தேதி செவ்வாய் காலையும் தாம்பரம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

மறுவழியாக, தூத்துக்குடியிலிருந்து 15ஆம் தேதி திங்கள் காலையும் 17ஆம் தேதி புதன் காலையும் பொங்கல் சிறப்புத் தொடர்வண்டி இயக்கப்படுகிறது. 

இந்தத் தொடர்வண்டி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com