தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம்
தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம்

தி.மு.க. - முஸ்லிம் லீக், வி.சி.க., கொ.ம.தே.க. பேச்சில் கேட்டது என்ன?

தி.மு.க. அணியில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடக்கூடிய தொகுதிகளின் பங்கீடு தொடர்பாக இன்று மூன்று கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதலில் வி.சி.க. தலைவர் திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச்செல்வன் உட்பட்டோர் ஆகியோர் பேச்சு நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், நான்கு தொகுதிகளைக் கேட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கோவை ஈசுவரன் தலைமையில் அக்கட்சிக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு சுமுகமாக இருந்ததாகவும் அறைக்குள் நடந்த விசயங்களைத் தெரிவிப்பது நன்றாக இருக்காது என்றும் அவர் கூறினார். 

முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொகிதீன் தலைமையிலான அக்கட்சிக் குழுவும் தி.மு.க. குழுவுடன் பேசியது. பின்னர் ஊடகத்தினரிடம் பேசிய காதர் மொகிதீன், நடப்பில் தங்கள்வசமுள்ள இராமநாதபுரம் தொகுதியுடன் கூடுதலாக மாநிலங்களவை இடம் ஒன்றும் வழங்குமாறு கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com