திண்டுக்கல் பாலினத் துன்புறுத்தல் குற்றவாளி ஜோதிமுருகன்
திண்டுக்கல் பாலினத் துன்புறுத்தல் குற்றவாளி ஜோதிமுருகன்

பாலினத் துன்புறுத்தல் - கல்லூரி உரிமையாளருக்கு 7 ஆண்டுகள் சிறை!

திண்டுக்கல் மாவட்டத்தில் செவிலியர் கல்லூரி உரிமையாளரான அ.ம.மு.க. பிரமுகர் ஜோதிமுருகன் என்பவர் மாணவிகளிடம் பாலினத் துன்புறுத்தலில் ஈடுபட்டார். விடுதிக் காப்பாளர் அர்ச்சனா அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. முத்தனம்பட்டியில் உள்ள செவிலியர் கல்லூரி மாணவிகளுடன் பெற்றோரும் மாவட்டத்தின் அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, திண்டுக்கல் மாவட்ட போக்சோ சட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டது. 

இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், ஜோதிமுருகனுக்கு 7 ஆண்டுகள் சிறைவாசமும் 75 ஆயிரம் ரூபாய் அபராதமும், விடுதிக் காப்பாளர் அர்ச்சனாவுக்கு 5 ஆண்டுகள் சிறைவாசமும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com