தமிழ் நாடு
கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் சென்ற வேன் கவிழ்ந்து விழுந்ததில்ஏழு பேர் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
கேரளத்திலிருந்து 16 பேர் கொண்ட குழுவினர் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
மலைப்பாதையில் 13ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது, வேன் விபத்துக்கு உள்ளானது.
அதில் பயணித்த 7 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்ற மூவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்துபோனதாகத் தகவல்கள் வந்துள்ளன.
காயமடைந்த மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.