தமிழக மீனவர்கள் 21 பேர் கைது: தொடரும் அவலம்!
(கோப்புப் படம்)

தமிழக மீனவர்கள் 21 பேர் கைது: தொடரும் அவலம்!

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 2 விசைப் படகுகளுடன் 21 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருவது தொடர்கதையாகி உள்ளது. மேலும் தமிழக மீனவர்களின் படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துகொள்கின்றனர்.

இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 விசைப்படகுகளுடன் 21 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை காங்கேசன்துறை கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செயல்பட்டு இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com