
தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு 29.12.2025 திங்கட் கிழமை அன்று திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் எனும் பெயரில் நடைபெறும் என அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்:
” தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட - துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் இம்மாநாடு நடைபெறுகிறது.
கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, முனைவர் க.பொன்முடி, திருச்சி சிவா, எம்.பி., ஆ.இராசா, எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கழக மகளிர் அணிச் செயலாளர் திருமதி ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ப.இராணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு.வி.செந்தில்பாலாஜி, எம்.எல்.ஏ., அவர்கள் வரவேற்கிறார்.
29.12.2025 திங்கட்கிழமை, மாலை 4.00 மணி அளவில் மாநாடு தொடங்கும்.
இம்மாநாட்டை அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், கா.இராமச்சந்திரன் - மாவட்டச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்களான மேயர் என்.தினேஷ்குமார், என்.நல்லசிவம், தோப்பு வெங்கடாசலம், தொ.அ.ரவி, தளபதி முருகேசன், துரை செந்தமிழ்ச்செல்வன், கே.எம்.ராஜு, கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், எம்.பி., கே.எஸ்.மூர்த்தி, - நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.ஈஸ்வரசாமி, எம்.பி., இ.பிரகாஷ், எம்.பி., கணபதி ப.இராஜ்குமார், எம்.பி., - சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், எம்.எல்.ஏ., ஏ.ஜி.வெங்கடாசலம், எம்.எல்.ஏ., பெ.இராமலிங்கம், எம்.எல்.ஏ., ஆர்.இளங்கோ, எம்.எல்.ஏ., க.சிவகாமசுந்தரி, எம்.எல்.ஏ., இரா.மாணிக்கம், எம்.எல்.ஏ., ஆகியோர் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்வார்கள். நிறைவாக, திருப்பூர் மத்திய மாவட்டச் செயலாளர் திருப்பூர் க.செல்வராஜ், எம்.எல்.ஏ. நன்றியுரை ஆற்றுகிறார்.” என்று தி.மு.க. தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.