
மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைச் செயலகத்தின் தேர்தல் நடத்தும் அதிகாரி சீத்தா, இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
”மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் 02.04.2026-ஆம் நாளன்று முடிவடைவதால் ஏற்படும் காலியிடங்களுக்கு கீழ் காணும் வேட்பாளர்கள் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்:
1.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
திராவிட முன்னேற்றக் கழகம்
2. கிறிஸ்டோபர் மாணிக்கம்
இந்திய தேசிய காங்கிரஸ்
3. எல்.கே. சுதீஷ்
தேசிய முற்போக்கு திராவிட கழகம்
4. மு. தம்பிதுரை
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
5.திருச்சி சிவா
திராவிட முன்னேற்றக் கழகம்
6.டாக்டர் அன்புமணி ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சி” என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.