ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக்

ஜாபர் சாதிக்குக்கு 7 நாள்கள் என்.சி.பி. காவல்!

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை 7 நாள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்.சி.பி.) காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்டார். அவரிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஜாபர் சாதிக் அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுத்திருப்பதும், திரைப்படங்கள் தயாரித்து இருப்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை டெல்லி பாட்டியாலா விசாரணை நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர். அப்போது, ஜாபர் சாதிக்கிடம் மேற்கொண்டு விசாரணை நடத்த ஏழு நாள்கள் வேண்டும் என என்.சி.பி. அதிகாரிகள் தெரிவித்தனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஜாபர் சாதிக்கை 7 நாள்கள் என்.சி.பி. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com