வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடையும்.” என்றும்,

”வரும் 24ஆம் தேதி காலைக்குள் வடகிழக்கு திசையிலேயே நகர்ந்து, மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் கன, மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் கனமழை தொடரும்.

தமிழகத்தின் தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் 23ஆம் தேதிக்குப் பின்னர் மழை படிப்படியாகக் குறையும் என்றும் வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்கும் என்றும் வானியல் மைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com